ஹாய் ஃப்ரெண்ட்ஸ் 😍 யாரோ இவள் இறுதி அத்தியாயம் https://ezhilanbunovels.com/tamil-novels-and-stories/%e2%9d%a3%ef%b8%8f%e0%ae%85%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-30%e2%9d%a3%ef%b8%8ffinal/ இந்தக் கதைக்கு நீங்க குடுத்த ஆதரவுக்கு நன்றி. நாளைக்கு...
ஆதித்யா சுவாரசியமாக கதை கேட்பவனைப் போல காட்டிக்கொண்டு “அவன் உன்னை நெருங்கவிடுவான்னு தோணுதா ஜி.பி?” என்று கேட்க
“அவனுக்கு என் மேல ஒரு கண் இருக்குல்ல... அதை யூஸ் பண்ணி அவனை செடியூஸ் பண்ணி தனியா ஒரு இடத்துக்குக் கூட்டிட்டுப் போய் அவனை கொன்னுட வேண்டியது தான்” என்றாள் வர்ஷா.
அதை கேட்டதும் ஆதித்யாவிற்கு சிரிக்கவும் முடியவில்லை, அழவும் முடியவில்லை. அவள் தலையில் குட்டியவன்
“அட அறிவுக்கொழுந்தே! ஓவரா தெலுங்கு படம் பார்த்தா இப்பிடி தான் மூளை லாஜிக் இல்லாம நிதர்சனம்னா என்னனு புரிஞ்சிக்காம சிந்திக்கும்... கொஞ்சம் யோசி, அவன் எவ்ளோ பெரிய பிசினஸ் டைகூன்... நீ ரம்பை, மேனகை, ஊர்வசிக்கே டஃப் குடுக்குற அழகியா இருந்தாலும் அவனை கொலை பண்ணுற வரைக்கும் அவன் பூ பறிச்சிட்டா இருப்பான்? ரியாலிட்டில நடக்காததை பத்தி ஓவரா யோசிக்காத ஜி.பி... ஃப்ராங்கா ஒன்னு சொல்லட்டுமா? நம்மளால அவனை ஒன்னுமே பண்ண முடியாது.. ஐ மீன் நேரடியா அவன் கூட சண்டை போட்டு ஜெயிக்குறதுலாம் சினிமா, ட்ராமா, நாவல்கள்ல வேணும்னா சாத்தியம்... ரியாலிட்டில அதுக்கு பாயிண்ட் ஒன் பர்சென்டேஜ் கூட வாய்ப்பில்ல” என்று நிதர்சனத்தைப் போட்டு உடைத்தான்.
உடனே வர்ஷாவின் முகம் கூம்பிப் போனது.
“அஜித் சித்தப்பாவால கூட முடியாதா?” ஏமாற்றத்துடன் கேட்டாள் அவள்.